3 படத்திலிருந்து அமலா பால் வெளியேறினாரா, வெளியேற்றப்பட்டாரா?

|


ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் 3 படத்தில் இருந்து அமலா பால் விலகியதற்கு காரணம் கால்ஷீட் பிரச்சனை என்று கூறப்பட்டது. ஆனால் அதை அமலா மறுத்துள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் முதல் படமான 3ல் தனுஷ் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிப்பார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஸருதி பிற படங்களில் பிசியாக இருப்பதால் நடிக்க முடியவில்லை என்று கூறினார்கள். அதன் பிறகு ஸ்ருதிக்கு பதில் அமலா பால் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது. அமலா பாலும் கால்ஷீட் பிரச்சனையால் விலகினார் என்று செய்தி வந்தது.

பிறகு ஸ்ருதியே மீண்டும் நாயகியாக அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பும் நடந்து வருகிறது. மேலும் ஐஸ்வர்யா தனுஷ் டுவிட்டரில் ஸ்ருதியை வரவேற்று மெசேஜும் போட்டார்.

இந்நிலையில் தான் ஒன்றும் கால்ஷீட் பிரச்சனையால் 3 படத்தில் இருந்து வெளியேறவில்லை என்று அமலா பால் தெரிவித்துள்ளார். நான் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பதில்லை. வேட்டை படத்திற்குப் பிறகு நான் வேறு எந்த படத்திற்கும் ஒப்புதல் அளிக்கவில்லை என்றார் அமலா.

3 படத்தை விட்டு வெளியேறியதை அமலா பால் மறுக்கிறார். அதே நேரத்தில் உண்மையான காரணத்தையும் அவர் சொல்ல மாட்டேன் என்கிறார். முடிந்து போன விஷயத்தைப் பற்றி பேசவிரும்பவில்லை என்று மழுப்புகிறார்.

வெளியேறவில்லை என்றால், வெளியேற்றப்பட்டாரா அமலா?
 

+ comments + 1 comments

17 November 2011 at 20:00

அப்பற அதப்பத்தி நீ ஏ எழுதற?

Post a Comment