ஹீரோக்களுக்காக மாஸ் படம் பண்ண மாட்டேன் : சற்குணம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பணத்துக்காக ஹீரோக்களுக்கு மாஸ் படம் பண்ண மாட்டேன் என்று 'களவாணி' மற்றும் 'வாகை சூட வா' படங்களின் இயக்குனர் சற்குணம் கூறியுள்ளார். 'களவாணி', 'வாகை சூட வா' படங்களை தொடர்ந்து சற்குணம் இயக்கும் படம், 'கோவத்தை அள்ளி கொஞ்சுகிறேன்'. இதுகுறித்து அவர் கூறியதாவது: அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் இப்படத்தை உருவாக்குகிறேன். முழுநீள காமெடி மற்றும் காதல் கதையாக உருவாகிறது. நாம் பேச்சுவழக்கில் சொல்வது போல், 'கோவத்தை அள்ளி கொஞ்சுகிறேன்' என்று பெயரிட்டுள்ளேன். பொங்கல் முடிந்ததும் ஷூட்டிங் தொடங்குகிறது. இதையடுத்து கலைப்புலி எஸ். தாணு தமிழ், தெலுங்கில் தயாரிக்கும் படத்தை இயக்குகிறேன். இருமொழிகளைச் சேர்ந்த முன்னணி ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஆனால் பணம் கிடைக்கும் என்பதற்காக ஹீரோக்களுக்காக மாஸ் படம் பண்ண மாட்டேன். மக்களின் கதையை படமாக்குவேன் என்றவர் அடுத்து க்ரைம் த்ரில்லர் ஒன்றை இயக்கப் போவதாகவும், தாணு அதனை தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக படத்தின் ஹீரோவாக சீயான் விக்ரமின் பெயரை உச்ச‌ரிக்கிறது கோடம்பாக்கம்.


 

Post a Comment