மனோஜும் மகத்தும் மோதிக்கொண்டதில் பலனடைந்த டாப்ஸி

|

Tapsee Gets 1 Crore   

கடந்த மாதம்வரை டாப்ஸி பற்றி அறியாதவர்கள் கூட நடிகர் மனோஜ் - மகத் அடிதடிக்குப் பிறகு டாப்ஸி பற்றி தெரிந்து கொண்டனர். அந்தளவிற்கு டாப் டூ பாட்டம் டாப்ஸிக்காக நடந்த அடிதடி பற்றிதான் மீடியாக்கள் மாய்ந்து மாய்ந்து செய்தி வெளியிட்டன. இந்த பப்ளிசிட்டியால் டாப்ஸிக்கு நல்ல பலன் கிடைத்துவிட்டது.

சென்னையில் உள்ள பிரபலமான விளம்பர நிறுவனம் ஒன்று, தங்களது கம்பெனி விளம்பரத்தில் நடிக்க டாப்ஸியைக் கேட்டிருக்கிறது. படங்களை எதிர்பர்த்துக்கொண்டிருந்த டாப்ஸிக்கு இப்படி விளம்பரத்தில் நடிக்க அழைப்பு வந்ததும், கடுப்பாகிப் போனார். நிறைய சம்பளம் கேட்டால் போய் விடுவார்கள் என்று நினைத்து ஒரு கோடி வேண்டும் என்று குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார். ஆனால் அந்த நிறுவனமோ 1 கோடி கொடுக்க நாங்கள் ரெடி என்று கூலாகக் கூறியிருக்கிறார்கள். ஆடுகளம்' படத்திற்குப்பின் தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்த டாப்ஸிக்கு மஞ்சு மனோஜும், மகத்தும் ஓசியில் பப்ளிசிட்டி கொடுத்து தூக்கிவிட்டுவிட்டார்களே என்று கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கிறார்கள். இதுகூட நல்ல விளம்பராமா இருக்கே நாமளும் முயற்சி செய்யலாமா என்று மார்க்கெட் இல்லாத நடிகைகள் யோசித்துக்கொண்டிருக்கிறார்களாம்.

 

Post a Comment