நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்த நடிக்க நான் தயார் என்று நடிகை சினேகா தெரிவித்துள்ளார்.
பிரசன்னாவைத் திருமணம் செய்த பிறகும் தொடர்ந்து விளம்பரங்களில் நடிப்பது, கடைகள் திறப்பது என்று பிஸியாக உள்ளார் சினேகா.
சமீபத்தில் சினேகா நடித்த ‘ஹரிதாஸ்' படம் ரிலீசாகி, அவருக்கு பாராட்டுகள் குவிகன்றன.
இது அவரது திரைவாழ்க்கையில் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்து வைத்துள்ளது.
தொடர்ந்து நல்ல கதைகள் வந்தால் நடிக்க தயாராக இருப்பதாக சினேகாவும் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து சினேகா கூறுகையில், "இந்தப் படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. திருமணம் உறுதியானபோது ஒப்புக் கொண்டேன். திருமணத்துக்குப் பிறகு வெளியானது.
இதில் நான் ஏற்ற அமுதவல்லி வேடம் ரொம்பப் பிடித்துவிட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நல்ல படமாக இது அமைந்துள்ளது.
ஹரிதாஸ் போன்ற நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன். இதுபோன்ற படங்களுக்கே இனி முன்னுரிமை," என்றார்.
Post a Comment