கத்தியைத் தீட்டாதே,பனிவிழும் மலர்வனம் ஆடியோ-ட்ரைலர் வெளியீடு

|

கத்தியைத் தீட்டாதே
புத்தியைத் தீட்டு,
பனிவிழும் மலர்வனம்,
படங்களில் இசை, ட்ரைலர்
வெளியீட்டு விழா வரும்
ஞாயிறன்று சென்னையில்
நடைபெற உள்ளது.

டி.எஸ்.கே பட நிறுவனம்
தயாரித்துள்ள படம்
கத்தியைத் தீட்டாதே
புத்தியைத் தீட்டு. இதில்
கதாநாயகனாக ஆதவாராம்
அறிமுகமாகிறார்.

கதை, திரைக்கதை, வசனம்
எழுதி இயக்கியுள்ளார்
ஸ்ரீ கிருஷ்ணா.
இப்படத்திற்கு இசை பிரேம்.
ஒளிப்பதிவு முரேஷ்.
கோவிலம்பாக்கம் டி.
சிங்காரம்
தயாரித்துள்ளார்.

*கத்தியைத் தீட்டாதே
புத்தியைத் தீட்டு*

இந்தப் படத்தின் இசை
வெளியீட்டு விழா சென்னை
வடபழனியில் உள்ள ஏ.வி.எம்
ஸ்டுடியோவில் காலையில்
நடைபெற உள்ளது. தமிழ்
தொலைக்காட்சிகள் சங்கத்
தலைவர் டி. தேவநாதன்
தலைமையில் நடைபெறும் இந்த
விழாவில் திரைப்பட
இயக்குநர்கள் அரவிந்த
ராஜ், சீனு ராமசாமி,நடிகர்
விஜய் வசந்த், கார்த்திக்
தங்கபாலு உள்ளிட்ட பலரும்
பங்கேற்கின்றனர்.

*பனிவிழும் மலர் வனம்*

பனிவிழும் மலர்வனம்
படத்தின் பாடல்
வெளியீட்டு விழா ஞாயிறு
மாலை பிரசாத் லேப்பில்
நடைபெற உள்ளது. இந்த
படத்தினை சி.டி.என்
புரடெக்சன் நிறுவனம்
தயாரிக்கிறது. கதாநாயகனாக
அபிலாஷ், கதாநாயகிகளாக
சாய்னா மற்றும் வர்ஷா
ஆகியோர் நடித்துள்ளனர்.
இயக்கம் ஜேம்ஸ் டேவிட், இசை
ராஜீவ்.
 

Post a Comment