பாடலாசிரியர் பழனிபாரதியின் தந்தை சாமி பழனியப்பன் மரணம்

|

சென்னை: பிரபல பாடலாசிரியர் பழனி பாரதியின் தகப்பனார் சாமி பழனியப்பன் மரணமடைந்தார்.

82 வயதான பழனியப்பன், பாரதிதாசன் பரம்பரையைச் சேர்ந்த கவிஞர் ஆவார். தீவிர பெரியார் பற்று கொண்டவர். பாரதிதாசன், அண்ணா, கருணாநிதி, கண்ணதாசின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், தமிழறிஞர்களுடன் நல்ல தொடர்பு வைத்திருந்தவர்.

பத்திரிக்கையாளராகவும் பரிமளித்தவர் சாமி பழனியப்பன். தமிழக அரசின் செய்தித்துறை ஏடான தமிழரசு பத்திரிக்கையிலும் பணியாற்றியுள்ளார்.

உடல்நலக்குறைவால் காலமானார் சாமி பழனியப்பன். அவரது உடலுக்கு திரைத்துறையினர், பத்திரிக்கையாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

 

Post a Comment