சென்னை: தேசிய விருது வாங்கிய ஆடுகளத்தை தனுஷுக்காக உருவாக்கித் தந்த வெற்றிமாறன், தற்போது தனுஷிற்காக புதிய காடுகளம் ஒன்றைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.
பலத்த யோசனைகளுக்குப் பிறகு தந்து அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ள வெற்றிமாறன், படத்தின் கதாநாயகனாக தனுஷையும் பிடித்து விட்டார். அதற்கும் மேலே, ஷங்கர் மூணு கோடி ரூபாய் கொடுத்து ரஜினிக்கு வில்லனாக நடிக்கச் சொன்னபோது, ஒரேயடியாக மறுத்து விட்டேன். ஏனெனில் நான் நெகடிவ் ரோல்களே பண்ண மாட்டேன்' என கர்ஜித்த ராஜ்கிரண் தான் படத்தின் வில்லனாம்.
ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார். படத்திற்கு ‘வேங்கைச்சாமி' என பெயரிட இருப்பதாக தகவல். ஆடுகளம் மாதிரி இப்படத்தின் பெரும்பகுதியை காடுகளில் எடுக்க திட்டமிட்டுள்ளாராம் வெற்றிமாறன்.
அதற்காக, படப்பிடிப்புக்கு பொருத்தமான காடு தேடும் படலம் தொடங்க இருக்கிறதாம்.
Post a Comment