திருமணத்துக்குப் பிறகு சினேகா - பிரசன்னா ஜோடியாக நடிக்கும் படம்

|

திருமணத்துக்குப் பிறகு நடிகை சினேகாவும் அவர் கணவர் பிரசன்னாவும் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தை அருண் வைத்தியநாதன் இயக்குகிறார். சினேகாவையும் பிரசன்னாவையும் சேர்த்து வைத்ததே இந்த அருண் வைத்தியநாதன் இயக்கிய அச்சமுண்டு அச்சமுண்டு படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்துக்குப் பிறகு சினேகா - பிரசன்னா ஜோடியாக நடிக்கும் படம்

திருமணத்துக்குப் பிறகு இருவரையும் ஜோடியாக நடிக்க பலர் அழைத்த போதும் மறுத்து வந்தவர்கள், அருண் வைத்தியநாதனுக்கு மட்டும் ஓகே சொல்லிவிட்டார்களாம்.

இதுகுறித்து சினேகாவிடம் கேட்டபோது, "இந்தப் படத்துக்கு பேச்சு வார்த்தை நடந்து வருவது உண்மைதான். ஆனால் எதுவும் முடிவாகவில்லை," என்றார்.

படத்தின் கதைப்படி, இருவரும் கணவன் - மனைவியாக நடிக்க வேண்டுமாம்!

 

Post a Comment