ஜெயா டிவியில் ஆல்பம் 2 நிகழ்ச்சியை பெப்சி உமா மீண்டும் தொகுத்து வழங்குகிறார்.
சன் டிவியில் பெப்ஸி நிறுவனம் ஸ்பான்சர் செய்த உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை 15 ஆண்டுகள் நடத்தி சாதனை புரிந்தவர். இதனால் அவரது பெயர் பெப்ஸி உமா என்றே மாறிப்போனது.
கட் அவுட் வைக்கும் அளவிற்கு பிரபலமான உமா, கலைஞர் டிவி தொடங்கப்பட்ட உடன் அங்கே மாறினார். பின்னர் அங்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களினால் மீடியா உலகை விட்டே விலகினார்.
ஜெயா டிவியில்
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஜெயாடிவியில் ஆல்பம் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலங்களை பேட்டி கண்டார். சிவகுமார், பிரபு என திரை உலக பிரபலங்களும், அரசியல் கட்சியினரையும், காவல்துறை அதிகாரிகளையும் பேட்டி கண்டார்.
போலீஸ் புகார்
ஜெயா டிவியில் பாலியல் ரீதியாக அவமானப்படுத்தப்பட்ட உமா, தன்னை அவமானப்படுத்திய நிகழ்ச்சி தயாரிப்பாளர் மீது போலீசில் புகார் கொடுத்து விட்டு மீண்டும் சின்னத்திரையிலிருந்து விலகிக் கொண்டார்.
உமா சமாதானம்
உமா புகார் கொடுத்த தயாரிப்பாளர் மீது சேனல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து சமாதானமாகிவிட்ட உமா மீண்டும் உற்சாகத்தோடு வருகிறார்.
ஆல்பம் 2
இப்போது மீண்டும் தனது சின்னத்திரை பயணத்தை தொடரவிருக்கிறார். "ஆல்பம் நிகழ்ச்சியோட ஒரு பகுதிதான் முடிந்திருக்கிறது. அடுத்த பகுதி புதுப்பொலிவுடன் தயாராகிக்கிட்டிருக்கு. வித்தியாசமான கோணத்தில் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறோம். மீண்டும் ஆல்பம் 2 வில் ரசிகர்களை சந்திப்பேன்" என்கிறார் உமா.
Post a Comment