நயன்தாராவின் மார்க்கெட் செம ஸ்டெடியாக உள்ளது. அதனால்தான் அவருக்கு அட்வான்ஸாக மட்டுமே ரூ 50 லட்சம் தந்திருக்கிறார்கள் சமீபத்தில் ஒப்பந்தமான ஒரு படத்துக்கு.
ராஜா ராணி, ஆரம்பம், இது கதிர்வேலன் காதல் என்று தொடர்ச்சியாக மூன்று ஹிட் படங்களில் நடித்ததன் மூலம், நயன்தாரா எவ்வளவு கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் தமிழ் படத் தயாரிப்பாளர்கள்.
கஹானி இந்திப் பட ரீமேக்கான நீ எங்கே என் அன்பே மற்றும் தெலுங்கு அனாமிகாவில் நாயகிக்குதான் முக்கியத்துவம். இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து அவருக்கு 2.5 கோடிக்கு மேல் சம்பளம் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.
அடுத்து தமிழில், உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் நண்பேண்டா படத்திலும் நயன்தாராதான் நாயகி.
முதலில் நண்பேண்டா படத்தில் நடிக்க இருந்தவர் காஜல் அகர்வால்தான். இதற்காக அவருக்கு அட்வான்ஸ் பணம் எல்லாம் கொடுத்துவிட்டார்கள். ஆனால் இது கதிர்வேலன் காதல் படத்தில் நயனின் ஜோடிப் பொருத்தம் உதயநிதிக்கு பிடித்துப் போகவே, காஜலை நீக்கிவிட்டு நயனையே ஒப்பந்தம் செய்துவிட்டார்.
மேலும் படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவுக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். முன்னதாக அட்வான்ஸாகவே ரூ 50 லட்சத்தை தூக்கிக் கொடுத்தாராம் உதயநிதி.
அதேசமயம், காஜலுக்குக் கொடுத்த அட்வான்ஸ் தொகையை உதயநிதி இன்னும் திரும்பிப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது.. அட்வான்ஸ் புக்கிங்!
Post a Comment