முதன் முறையாக.. சிம்பு படத்துக்காக ஒப்புக் கொண்ட நயன்தாரா!

|

சென்னை: முதல் முறையாக தன் சொந்தக் குரலில் டப்பிங் பேசப் போகிறார் நயன்தாரா.

பத்தாண்டுகளாக சினிமாவில் இருக்கும் நயன்தாரா, இதுவரை தமிழில் சொந்தக் குரலில் டப்பிங் பேசியதே இல்லை.

சிம்புவுடன் அவர் நடிக்கும் இது நம்ம ஆளு படத்தில்தான் முதல் முறையாக சொந்தக் குரலில் பேசப் போகிறார்.

முதன் முறையாக.. சிம்பு படத்துக்காக ஒப்புக் கொண்ட நயன்தாரா!

ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு டப்பிங் பேசும் எண்ணம் நயன்தாராவுக்கு இல்லையாம். ஆனால் இயக்குநர் பாண்டிராஜ்தான் அவரை சமாதானப்படுத்தி பேச சம்மதிக்க வைத்தாராம்.

இந்தப் படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்ததும் பாண்டிராஜ்தான். கரைப்பார் கரைத்தால் நயனும் சிம்புவுடன் நடிப்பார் என்று அப்போது பேசப்பட்டது. இப்போது டப்பிங் பேசவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இது நம்ம ஆளு ஷூட்டிங் கும்பகோணத்தில் நடந்து வருகிறது. விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பமாக உள்ளன.

 

Post a Comment