இத்தாலிய குறும்படப் போட்டியில் ஈழத் தமிழர் படத்துக்கு முதல் பரிசு!

|

இத்தாலிய குறும்படப் போட்டியில், ஈழத்து தமிழ் திரைக்கலைஞர் ஈழன் இளங்கோவின் மொழிப்பிறழ்வு எனும் படத்துக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.

ஈழத்து தமிழ் திரைப்படத்துறையில் இன்னுமொரு மைல்கல்லாக அமைந்திருப்பது "MISINTERPRETATION" "மொழிப்பிறழ்வு" எனும் குறுந் திரைப்படம்.

இத்தாலிய குறும்படப் போட்டியில் ஈழத் தமிழர் படத்துக்கு முதல் பரிசு!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற, சிட்னி திரைப்பட கல்லூரி ஒருங்கமைத்திருந்த இத்தாலிய குறும்படப் போட்டியில், பல மொழி குறுந் திரைப்படங்களுடன் போட்டியிட்டு முதலாம் பரிசை தட்டிச்சென்றுள்ளது இந்தப் படம்.

இப்படத்தில், ஒரு ஈழத்து அகதிப் பெண்ணின் துன்பங்கள் தத்துருபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படியான ஈழத்து கதையை சொல்லவேண்டிய கோணத்தில் இருந்து, சரியான கதை தெரிவுடனும், தெளிவுடனும், கலாச்சார சீர்கேடுகள், வன்முறைகள் போன்றவை இல்லாமல் மிக அழகான முறையில் காட்சிகள் அமைத்து இருந்தார் இயக்குனர் ஈழன் இளங்கோ.

இத்தாலிய குறும்படப் போட்டியில் ஈழத் தமிழர் படத்துக்கு முதல் பரிசு!

இது காலத்துக்கு தேவையான கதை. ஈழத்து உறவுகளின் உண்மையை கொண்டுவந்து வெளி நாட்டவர்களுக்கும் தெரியப்படுத்தி உள்ளார் என பலராலும் பாராட்டப்பட்டுள்ளது மொழிப்பிறழ்வு படம்.

சிறந்த ஒளிப்பதிவு, பின்ணணி இசை, காட்சி அமைப்பு என்று தமிழ் சினிமாவைத் தாண்டி வேறு கோணத்தில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஈழத்து கலைஞர்கள் மட்டுமின்றி வெளிநாட்டுக் கலைஞர்களையும் இந்தப் படத்தில் இயக்கியுள்ளார் ஈழன் இளங்கோ.

இத்தாலிய குறும்படப் போட்டியில் ஈழத் தமிழர் படத்துக்கு முதல் பரிசு!

ஈழன் இளங்கோ, பிரான்ஸ் நாட்டில் இயக்கி நடித்த 'தொடரும்' எனும் ஈழத்து மக்களின் பிரிவுளையும் தேடல்களையும் சித்தரிக்கும் மற்றுமொரு குறுந் திரைப்படம் இதே போட்டியில் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இவருடைய வேறு பல படைப்புகள் ஏற்கனவே சாதனை படைத்துள்ளன. ஆஸ்திரேலியாவில் முதல் தமிழ் திரைப்படமாக இவர் இயக்கிய "இனியவளே காத்திருப்பேன்" சர்வதேச தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அடுத்ததாக வெளிநாட்டு, இந்திய கலைஞர்களைக் கொண்டு முழு நீள திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். விரைவில் அதுபற்றிய விவரங்களை வெளியிடவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Post a Comment