தூக்கத்தில் நடக்கும் நோய் மீண்டு வந்த சமீரா
12/24/2010 4:07:56 PM
தூக்கத்தில் நடக்கும் நோயால் அவதிபட்டு வந்த சமீரா ரெட்டி, போராடி மீண்டதாகக் குறிப்பிட்டார். தமிழில், 'வாரணம் ஆயிரம்', 'அசல்' படங்களில் நடித்துள்ளவர் இந்தி நடிகை சமீரா ரெட்டி. தனக்கு தூக்கத்தில் நடக்கும் நோய் பற்றி சமீரா கூறுகையில் ஒரு வாரப் பயிற்சிக்குப் பிறகு இப்போது குணமாகிவிட்டேன். இந்தப் பிரச்னை எனக்கு 6 வயதிலிருந்தே இருந்தது. 20 வருடத்துக்குப் பிறகு, இப்போது மீண்டு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.
Source: Dinakaran
Post a Comment