12/25/2010 3:51:32 PM
சகிப்புத்தன்மை கொண்டவர் கணவராக வர வேண்டும் என்றார் சதா. இதுபற்றி அவர் கூறியதாவது: தமிழில் நான் நடித்துள்ள 'புலி வேஷம்' அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும் என நினைக்கிறேன். கன்னடம் மற்றும் இந்தி படத்தில் நடித்து வருகிறேன். இந்தியில் சில படங்களுக்கு கொடுத்த கால்ஷீட்டை வீணடித்துவிட்டார்கள். இதனால், தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டது. இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் 'சந்திரமுகி', 'ஆப்தரக்ஷகா' போன்ற நல்ல வாய்ப்புகளை இழந்ததுதான். கன்னடத்தில் ரவிச்சந்திரனுடன் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் இப்போது முடிந்துவிட்டது. வரும் மாதத்தை குடும்பத்துடன் கழிக்க விரும்புகிறேன். எப்போது திருமணம் என்கிறார்கள். சகிப்புத்தன்மை கொண்ட, என்னை புரிந்துகொள்கிற, நேர்மையான ஒருவரை தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்தால் திருமணம்தான். இவ்வாறு சதா கூறினார்.
Post a Comment