டப்பிங்கை 4 நாளில் முடித்த தீபிகா, 40 நாள் இழுத்தடித்த கத்ரீனா

|

Tags:


மும்பை: நடிகை தீபிகா படுகோண் தனது ஆரக்ஷன் படத்திற்கான டப்பிங்கை வெறும் 4 நாட்களில் முடித்துள்ளார். ஆனால் கத்ரீனாவோ ராஜ்னீதி பட டப்பிங்கை 40 நாட்களில் முடித்தார்.

தீபிகாவும், கத்ரீனா கைபும் ஒரு காலத்தில் ரன்பீர் கபூர் காதலியாக இருந்தார்கள். பின்னர் ஆளுக்கொரு திசையாக சென்றுவிட்டனர். பாலிவுட்டில் பெரிய நடிகைகள் ஒருவருக்கொருவர் பிடிப்பதே இல்லை. இதற்கு கத்ரீனா மட்டும் விதிவிலக்கா என்ன?

கத்ரீனா நடித்த ராஜ்னீதி படத்தை இயக்கிய பிரகாஷ் ஜா தற்போது தீபிகாவை வைத்து ஆரக்ஷன் என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் தனது டுவிட்டரில் தீபிகா வெறும் 4 நாட்களில் டப்பிங் வேலையை முடித்து சாதனை படைத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை பார்த்த கத்ரீனா கடுப்பாகி உடனே ஜாவை தொடர்பு கொண்டு தனது எரிச்சலை வெளிப்படுத்தினாராம்.

கடுப்புக்கு காரணம் கத்ரீனா ராஜ்னீதி பட டப்பிங்கை 40 நாட்களில் முடித்தார் என்பது தான்.

பிரகாஷ் ஜாவின் டுவிட்டர் செய்தியைப் பார்த்த கத்ரீனா அவர் தீபிகாவை பாராட்ட எழுதியிருக்கிறாரா அல்லது தன்னை குத்திக்காட்டுகிறாரா என்று நினைத்துள்ளார். என்ன பெரிய சாதனை, கதாபாத்திரத்தின் முக்கியத்துவம், உணர்வு வெளிப்பாடு மற்றும் நடிகர்களை பொறுத்துத் தானே டப்பிங் செய்ய முடியும் என்று முனுமுனுத்துள்ளார்.
 

Post a Comment