சென்னை: சென்னையில் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஒருவரின் வீட்டில் 80 பவுன் நகைகளும், ரூ. 6 லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் பெசன்ட் ரோடு முதல் தெருவில் வசித்து வரும் காஜா மொய்தீன் (60) சினிமா ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.
இவர் கடந்த 30ம் தேதி குடும்பத்துடன் வந்தவாசி சென்றார். நேற்றிரவு இவர்கள் வீடு திரும்பியபோது பீரோ லாக்கரில் இருந்த 80 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் பணம், அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவை மாயமாகியிருந்தன.
இதுகுறித்து ஐஸ்ஹவுஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியபோது, வீட்டின் பூட்டும், நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரின் பூட்டும் உடைக்கப்படாமல் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனால் யாரோ கள்ளச் சாவிகளைப் போட்டு வீட்டைத் திறந்து, பீரோ, லாக்கர்களையும் திறந்து கொள்ளையடித்துள்ளனர்.
காஜா மொய்தீன் குடும்பத்துக்கு தெரிந்த யாரோ தான் இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. கைரேகை நிபுணர்களும் ரேகைகளை பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் பெசன்ட் ரோடு முதல் தெருவில் வசித்து வரும் காஜா மொய்தீன் (60) சினிமா ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.
இவர் கடந்த 30ம் தேதி குடும்பத்துடன் வந்தவாசி சென்றார். நேற்றிரவு இவர்கள் வீடு திரும்பியபோது பீரோ லாக்கரில் இருந்த 80 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் பணம், அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவை மாயமாகியிருந்தன.
இதுகுறித்து ஐஸ்ஹவுஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியபோது, வீட்டின் பூட்டும், நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரின் பூட்டும் உடைக்கப்படாமல் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனால் யாரோ கள்ளச் சாவிகளைப் போட்டு வீட்டைத் திறந்து, பீரோ, லாக்கர்களையும் திறந்து கொள்ளையடித்துள்ளனர்.
காஜா மொய்தீன் குடும்பத்துக்கு தெரிந்த யாரோ தான் இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. கைரேகை நிபுணர்களும் ரேகைகளை பதிவு செய்துள்ளனர்.
Post a Comment