திருமணத்தையொட்டி தனது ரசிகர்கள் 4000 பேருக்கு திருமண விருந்து கொடுத்து அசத்தினார் நடிகர் கார்த்தி.
கார்த்தி - ரஞ்சனி திருமணம் இன்று கோவை கொடிசியா அரங்கில் கோலாகலமாக நடந்தது. திருமணத்த்துக்கு கோவை நகரமே திரண்டு வந்ததைப் போல திரளான கூட்டம்.
முன்னதாக, நேற்று மாலை கார்த்தி - ரஞ்சனி வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதிலும் ஏராளமான விஐபிக்கள் பங்கேற்றனர்.
இதில் சிறப்பு அம்சமாக, திருமணத்துக்கு வந்த கார்த்தியின் ரசிகர்கள் 4000 பேருக்கு சிறப்பு விருந்து பரிமாறப்பட்டது. இந்த விருந்தை மாதம்பட்டியைச் சேர்ந்த லட்சுமி கேட்டரிங் நிறுவனத்தினர் செய்திருந்தார்கள்.
ஏராளமான பொதுமக்களும் திருமண விருந்தை சுவைத்து கார்த்தி - ரஞ்சனி ஜோடியை வாழ்த்திச் சென்றனர்.
இதுகுறித்து கார்த்தி கூறுகையில், "எனக்கு எப்போதும் உறவினர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள், ரசிகர்கள் முக்கியம். இவர்கள் என்னோடு எப்போதும் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதற்காகத்தான் சென்னையில் வைக்காமல் இங்கே திருமணத்தை வைத்துக் கொண்டேன். ரசிகர்கள் திருப்தியாக சாப்பிட்டுச் சென்றது எனக்கு உண்மையிலேயே நிறைவாக உள்ளது," என்றார்.
கார்த்தி - ரஞ்சனி திருமணம் இன்று கோவை கொடிசியா அரங்கில் கோலாகலமாக நடந்தது. திருமணத்த்துக்கு கோவை நகரமே திரண்டு வந்ததைப் போல திரளான கூட்டம்.
முன்னதாக, நேற்று மாலை கார்த்தி - ரஞ்சனி வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதிலும் ஏராளமான விஐபிக்கள் பங்கேற்றனர்.
இதில் சிறப்பு அம்சமாக, திருமணத்துக்கு வந்த கார்த்தியின் ரசிகர்கள் 4000 பேருக்கு சிறப்பு விருந்து பரிமாறப்பட்டது. இந்த விருந்தை மாதம்பட்டியைச் சேர்ந்த லட்சுமி கேட்டரிங் நிறுவனத்தினர் செய்திருந்தார்கள்.
ஏராளமான பொதுமக்களும் திருமண விருந்தை சுவைத்து கார்த்தி - ரஞ்சனி ஜோடியை வாழ்த்திச் சென்றனர்.
இதுகுறித்து கார்த்தி கூறுகையில், "எனக்கு எப்போதும் உறவினர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள், ரசிகர்கள் முக்கியம். இவர்கள் என்னோடு எப்போதும் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதற்காகத்தான் சென்னையில் வைக்காமல் இங்கே திருமணத்தை வைத்துக் கொண்டேன். ரசிகர்கள் திருப்தியாக சாப்பிட்டுச் சென்றது எனக்கு உண்மையிலேயே நிறைவாக உள்ளது," என்றார்.
Post a Comment