சன் டிவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கமிஷனரை சந்திக்கிறார் நடிகை ரஞ்சிதா?

|


சென்னை: தானும், சாமியார் நித்தியானந்தாவும் இருந்தது போன்ற வீடியோ காட்சியை ஒளிபரப்பிய சன் டிவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னை போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் கொடுக்கவுள்ளார் நடிகை ரஞ்சிதா என்று தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இதுவரை 3 வழக்குகள் பாய்ந்துள்ளன. மேலும் வழக்குகள் பாயக் காத்துள்ளன. குண்டர் சட்டத்தின் கீழும் அவர் கைது செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

சக்சேனா மீதும் சன் பிக்சர்ஸ் மீதும் சன் டிவி நி்ர்வாகம் மீதும் தொடர்ந்து புகார்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் நித்தியானந்தா பக்தர்களும் சன் டிவி மீது புகார் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் அவரது பக்தர்கள் கூட்டமாக சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து நித்தியானந்தா, ரஞ்சிதா இடம் பெற்ற காட்சிகளை ஒளிபரப்பிய சன் டிவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் நடிகை ரஞ்சிதாவும் கமிஷனரை நேரில் சந்தித்து மனு கொடுக்கவுள்ளாராம். இன்று காலையே அவர் வருவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை வரவில்லை. மாலையில்வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நடிகை ரஞ்சிதா இன்று இரவு 7 மணிக்கு தி.நகரில் உள்ள ஸ்டார் சிட்டி ஹோட்டலில் சந்தித்துப் பேட்டி அளிப்பார் என்றும் பி.ஆர்.ஓ மூலம் செய்தி ஒன்றும் பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 

Post a Comment