கமல்- கிரேசி கூட்டணியில் 'நண்பர்களும் 40 திருடர்களும்....'

|


பம்மல் கே. சம்பந்தம், பஞ்சதந்திரம், வசூல்ராஜா படங்களுக்குப் பிறகு கமலும் கிரேசி மோகனும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர்.

கமலுக்கு எப்போதுமே ஒரு வழக்கம் உண்டு. ஒரு பெரிய படத்தை முடித்தவுடன் ரிலாக்ஸ்டாக ஒரு காமெடி படத்தில் நடிப்பார். அந்தப் படம் முடிவதற்குள் அடுத்து தசாவதாரம் போன்ற பெரிய முயற்சிக்கான திரைக்கதையையும் எழுதி முடித்து விடுவார். ஆளவந்தானுக்கு பிறகு பம்மல் கே.சம்பந்தம், விருமாண்டிக்கு பிறகு மும்பை எக்ஸ்பிரஸ், தசாவதாரத்துக்கு பிறகு மன்மதன் அம்பு… என்று இதற்கு நிறைய உதாரணங்களை சொல்லலாம். இவரது இந்த சூப்பர் பார்முலாவை விக்ரம், சூர்யாவும் கூட சத்தமில்லாமல் பின்பற்றி வருகிறார்கள். இயக்குனர் ஷங்கரும் இதனை சமீபகாலமாகப் பின்பற்றத் தொடங்கியுள்ளார். முதல்வனுக்கு பின் பாய்ஸ்… எந்திரனுக்கு பிறகு நண்பன்… உதாரணங்கள்.

தற்போது கமல் விஸ்வரூபம் படத்தின் படப்பிடிப்பை பல தடைகளுக்கு பிறகு துவக்கிவிட்டார். பெரிய பட்ஜெட்டில் வெளிநாட்டு லொகேஷன்களில் உருவாக இருக்கும் இந்தப் படத்திற்கு பிறகு அவர், கிரேசி மோகன் கதை, வசனத்தில் நண்பர்களும் 40 திருடர்களும் என்ற முழு நீள காமெடி படத்தில் நடிக்கப்போவதாக உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் கூறுகின்றன.

 

Post a Comment