காஜல் மீது கஜோல் கணவர் அஜய் தேவ்கனுக்கு திடீர் கரிசனம்

|


சிறந்த கணவன் என்று பெயர் எடுத்துள்ள நடிகர் அஜய் தேவ்கனுக்கு சிங்கம் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த காஜல் அகர்வால் மீது திடீர் கரிசனம் ஏற்பட்டுள்ளது.

இந்தி சிங்கம் படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் காஜல் அகர்வால். இது தான் காஜலின் முதல் இந்தி படம். இந்நிலையில் தென்னிந்திய படம் ஒன்றின் படபிடிப்புக்காக காஜல் பாங்காக் செல்ல வேண்டியிருந்தது. கடைசி நேரத்தில் அவரது உதவியாளர் நழுவ, துணைக்கு ஆளில்லாமல் தவித்தார் காஜல்.

உடனே நான் இருக்க கவலை ஏன் என்று அஜய் தேவ்கன் வந்துள்ளார்.

இது குறித்து காஜல் கூறியதாவது,

நான் நடிக்கும் தென்னிந்திய படம் ஒன்றின் படபிடிப்புக்காக பாங்காக் செல்ல வேண்டியிருந்தது. எனக்கு துணையாக வரவேண்டிய எனது உதவியாளர் கடைசி நேரத்தில் முடியாது என்று கூறிவிட்டார். இது குறித்து அறிந்த அஜய் எனக்கு துணையாக ஒரு ஆளை அனுப்பி வைத்தார் என்றார்.

என்ன துணைக்கு ஆளத் தான அனுப்பினார் அவர் ஒன்றும் செல்லவில்லையே என்று தானே நினைக்கிறீர்கள். வழக்கமாக அஜய் தேவ்கன் யாருடனும் அவ்வளவாக ஒட்டமாட்டார். ஒரு நடிகைக்கு தானாக வந்து உதவி செய்திருப்பது இதுவே முதல் தடவை.

அட உண்மையிலேயே அஜய் தான் உதவினாரா என்று பாலிவுட் வியக்கிறது.

 

Post a Comment