ஆசின் அன்பாக பழக கூடியவர், கூறுகிறார் டோணி

|


மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி, நடிகை ஆசின் மிகவும் அன்பாகப் பழகுவதாக, கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் நுழைந்த மிகக் குறுகிய நாட்களிலேயே, அணியின் தலைமை ஏற்றவர் மகேந்தர சிங் டோணி. இந்திய அணியின் கேப்டனாக டோணி தலைமையில், டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்தது. சமீபத்தில் ஒருநாள் உலகக் கோப்பையும் வென்றது.

டோணி, மைதானத்தில் மட்டுமல்ல விளம்பர மாடலாக போஸ் கொடுப்பதிலும் திறமையானவர். இந்திய அணியில் விளம்பரங்களில் நடித்து, அதிக வருவாய் ஈட்டும் வரும் நிலையில், டோணி சிக்கும் சர்ச்சைகளுக்கும் குறைவில்லை.

சமீபத்தில், ஷூ விளம்பரம் ஒன்றில் பாலிவுட் கவர்ச்சி நாயகி பிபாஷா பாசுவுடன், டோணி இணைந்து நடித்தார். இதன்மூலம் டோணி அதிகமாக பேசப்பட்ட நிலையில், தற்போது பிக் பஜார் நிறுவனத்திற்காக, தமிழில் இருந்து இந்திக்கு தாவிய ஆசினுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இதற்கு முன் மிரின்டா குளிர்பான விளம்பரத்தில் நடித்த ஆசினுக்கு பல படவாய்ப்புகள் வந்தது. தற்போது மார்க்கெட் சற்று வீழ்ச்சி கண்டுள்ள ஆசின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கு பிக்பஜார் விளம்பரம் உதவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விளம்பர படப்பிடிப்பின் இருவரும் பேசி பழகியது குறித்து டோணி கூறுகையி்ல், குழந்தை குணம் கொண்ட ஆசின் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர், என்றார்.

 

Post a Comment