சென்னை: உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஜெயலலிதாவை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் சந்தித்து தெரிவித்தார்.
இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில் நேற்று பிற்பகல் திரைப்பட இயக்குனரும், விஜய் மக்கள் இயக்கத்தின் நிறுவனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் சந்தித்து, நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சி மன்றத் தேர்தலில், அ.தி.மு.க.விற்கு, 'விஜய் மக்கள் இயக்கம்' முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
அதற்கு, கழகப் பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார், என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத்தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவுக்காக தேர்தல் வேலை பார்த்தது. ஆனால் கடைசி வரை நடிகர் விஜய் நேரடியாக ஆதரவு தெரிவிக்கவில்லை.
அதிமுக ஜெயித்ததும், நாம் விரும்பியது நடந்தது என்று அறிக்கை மட்டும் அளித்தார்.
இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில் நேற்று பிற்பகல் திரைப்பட இயக்குனரும், விஜய் மக்கள் இயக்கத்தின் நிறுவனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் சந்தித்து, நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சி மன்றத் தேர்தலில், அ.தி.மு.க.விற்கு, 'விஜய் மக்கள் இயக்கம்' முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
அதற்கு, கழகப் பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார், என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத்தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவுக்காக தேர்தல் வேலை பார்த்தது. ஆனால் கடைசி வரை நடிகர் விஜய் நேரடியாக ஆதரவு தெரிவிக்கவில்லை.
அதிமுக ஜெயித்ததும், நாம் விரும்பியது நடந்தது என்று அறிக்கை மட்டும் அளித்தார்.
Post a Comment