நாளை சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: பாத்திமா பாபு, ஆர்த்தி உள்ளிட்டோர் போட்டி

|


சென்னை: சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நாளை (9-ந்தேதி) நடக்கிறது. விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.கே.ஆர். கல்யாண மண்டபத்தில் காலை 9 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது.

அனைத்து டி.வி. நடிகர், நடிகைகளும் இதில் கலந்து கொண்டு ஓட்டு போடுகின்றனர்.

இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு பானுபிரகாஷ், சிவசீனிவாசன், ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பானுபிரகாஷ் அணியில் துணை தலைவர் பதவிக்கு அபிஷேக், பாத்திமாபாபு, ஆகியோரும் பொதுச்செயலாளர் பதவிக்கு பூவிலங்கு மோகனும், பொருளாளர் பதவிக்கு ஸ்ரீதரும் இணை செயலாளர் பதவிக்கு ஆர்த்தி, கமலேஷ், விஸ்வநாத், டிங்கு ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

இதே அணியில் பிரேம், மேஜர் கவுதம் சாக்ஷி, சிவா, விஜய் ஆதிராஜ், பிரியதர்ஷினி, வெங்கட், மீனாகுமாரி, சங்கீதா, சாய்ராம், ஆதித்யா, சுபா கணேஷ், பாபு ஆயோர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நிற்கின்றனர்.

ராஜேந்திரன் அணியில் பொதுச்செயலாளர் பதவிக்கு ராஜ்காந்த், துணை தலைவர் பதவிக்கு மனோபாலா, விஜய்பாபு ஆகியோர் போட்டியிடுகின்றனர். சிவ சீனிவாசன், அணியில் பொதுச் செயலாளர் பதவிக்கு பரத் கல்யாண் நிற்கிறார்.
 

Post a Comment