நடிகை சமந்தா ஒரே வருத்தத்தில் இருக்கிறாராம். காரணம் யார் தெரியுமா? இயக்குனர் மணிரத்னமாம்.
முதலில் டோலிவுட்டிலும், பிறகு கோலிவுட்டிலும் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தெலுங்கு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் திரிஷா வேடத்தில் நடித்தவர் சமந்தா.
இந்தப் படத்துக்குப் பின்னர் தெலுங்கில் சமந்தா காட்டில் பெரும் மழை. அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். சமீபத்தில் மகேஷ்பாபுவுடன் நடித்த தூக்குடு சமந்தாவை ஒரேயடியாகத் தூக்கிவிட்டு விட்டது. அதனால் இன்றைய தேதிக்கு தெலுங்கில் பெரிய நடிகை யார் என்றால் சமந்தா என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறார். சம்பளத்தை கூட கோடி ரூபாயாக்கிவிட்டார் என்று சொல்கிறார்கள்..
தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் சமந்தா. இந்த முறை, தமிழில் நடிக்கிறார் - நீ தானே என் பொன் வசந்தம் என்ற படத்தில். கெளதம் மேனன் இயக்கத்தில் சமந்தா இணைவது இது 2வது முறை. இந்நிலையில் கார்த்திக் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் இயக்குனர் மணிரத்னம் தனது படத்திற்கு சமந்தாவை நாயகியாக்க முயற்சித்துள்ளார். இதனால் சமந்தாவுக்கு ஒரே குஷி. ஆஹா, மணிரத்னம் படத்தில் நடிக்கப்போகிறோம் என்று சந்தோஷமாக இருந்தார்.
இடையில் என்னாச்சோ, ஏதாச்சோ தெரியவில்லை இல்லம்மா இந்த படத்திற்கு நீ வேண்டாம் என்று மணிரத்னம் கூறிவிட்டாராம். இப்படி ஒரு நல்ல வாய்ப்பு கைநழுவிவிட்டதே என்று அம்மணிக்கு ஒரே வருத்தமாம்.
மணி கைவிட்டா என்னா மேனன்தான் இருக்காரே, தொடர்ந்து 'ஆபர்' கொடுத்து சமந்தாவுக்குக் கை கொடுப்பார் என்று நம்பலாம்...!
முதலில் டோலிவுட்டிலும், பிறகு கோலிவுட்டிலும் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தெலுங்கு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் திரிஷா வேடத்தில் நடித்தவர் சமந்தா.
இந்தப் படத்துக்குப் பின்னர் தெலுங்கில் சமந்தா காட்டில் பெரும் மழை. அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். சமீபத்தில் மகேஷ்பாபுவுடன் நடித்த தூக்குடு சமந்தாவை ஒரேயடியாகத் தூக்கிவிட்டு விட்டது. அதனால் இன்றைய தேதிக்கு தெலுங்கில் பெரிய நடிகை யார் என்றால் சமந்தா என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறார். சம்பளத்தை கூட கோடி ரூபாயாக்கிவிட்டார் என்று சொல்கிறார்கள்..
தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் சமந்தா. இந்த முறை, தமிழில் நடிக்கிறார் - நீ தானே என் பொன் வசந்தம் என்ற படத்தில். கெளதம் மேனன் இயக்கத்தில் சமந்தா இணைவது இது 2வது முறை. இந்நிலையில் கார்த்திக் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் இயக்குனர் மணிரத்னம் தனது படத்திற்கு சமந்தாவை நாயகியாக்க முயற்சித்துள்ளார். இதனால் சமந்தாவுக்கு ஒரே குஷி. ஆஹா, மணிரத்னம் படத்தில் நடிக்கப்போகிறோம் என்று சந்தோஷமாக இருந்தார்.
இடையில் என்னாச்சோ, ஏதாச்சோ தெரியவில்லை இல்லம்மா இந்த படத்திற்கு நீ வேண்டாம் என்று மணிரத்னம் கூறிவிட்டாராம். இப்படி ஒரு நல்ல வாய்ப்பு கைநழுவிவிட்டதே என்று அம்மணிக்கு ஒரே வருத்தமாம்.
மணி கைவிட்டா என்னா மேனன்தான் இருக்காரே, தொடர்ந்து 'ஆபர்' கொடுத்து சமந்தாவுக்குக் கை கொடுப்பார் என்று நம்பலாம்...!
Post a Comment