யார் மனைவியையும் நான் கடத்தவில்லை... கற்பனையான குற்றச்சாட்டு! - சினேகன்

|


உயர்திரு 420 ஹீரோவும் பாடலாசிரியருமான சினேகன், மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு எஞ்ஜினீயரின் மனைவியை குழந்தையோடு அபகரித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு கோடம்பாக்கத்தில் பரபரப்பு கிளப்பியுள்ளது.

இந்த புகார் குறித்து சினேகனிடம் விசாரித்தபோது, "பிரபாகரனின் விருப்பத்தோடுதான் அவரது மனைவியை நான் நடித்த படத்தில் நடன இயக்குனராக அறிமுகப்படுத்தினேன். ஒருநாள்தான் அவர் படப்பிடிப்புக்கு வந்தார்.

அதற்குள் பிரபாகரன் சந்தேகப்பட்டு சண்டை போட ஆரம்பித்துவிட்டார். இதனால் அவரது மனைவியை படப்பிடிப்புக்கு வரவேண்டாம் என்று கூறிவிட்டேன்.

அவர்களது குடும்ப பிரச்சினையில், என்னை தேவையில்லாமல் இழுத்துள்ளார். என்மீது அவதூறாக புகார் கொடுத்துள்ளார். அவரது மனைவியை நான் கடத்தவில்லை. அவரது தாயார் வீட்டில் இருக்கிறார். குழந்தையை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

என்மீது கொடுக்கப்பட்டுள்ள பொய் புகாரை சட்டப்படி சந்திப்பேன். கமிஷனரை சந்தித்து நானும் புகார் மனு கொடுப்பேன்," என்றார்.

உங்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்ததாக பிரபாகரன் கூறியுள்ளாரே, என்று கேட்டதற்கு, "அது அவரது கற்பனையாக இருக்கும்" என்றார்.
 

Post a Comment