ஊர்வசியுடன் நடிக்க பயம் தருண்கோபி.

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஊர்வசியுடன் நடிக்க பயந்தேன்' என்று தருண்கோபி கூறினார். மேலும் அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் மாமியார், மருமகன் உறவு என்பது அற்புதமானது. அதைச் சொல்லும் படம்தான் 'பேச்சி யக்கா மருமகன்'. இதில் எனது மாமியாராக ஊர்வசி நடிக்கிறார். 400 படங்களுக்கு மேல் நடித்துள்ள ஹீரோயினுடன் இணைந்து நடிக்கும்போது பயமாக இருந்ததது. எனக்குப் பெரிய அளவில் நடிப்பு வராது.

ஆனால், மருமகன் கேரக்டரை உள்வாங்கிக் கொண்டு, அவருடன் நின்றிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். பிறகு அவரே எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தார். ஷூட்டிங் முடிந்தபோது, அவரை என் நிஜ மாமியாராகவே உணர்ந்தேன். படத்தைப் பார்த்த கவிஞர் வைரமுத்து, 'தருண்கோபி நடிக்கவில்லை. கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். அவருக்கு விருது கிடைக்கும். அதற்குமுன், என் கண்ணீர்த் துளிகளையே விருதாகத் தருகிறேன்' என்றார். இதையே பெரிய விருதாக நினைக்கிறேன்.


 

Post a Comment