அசின்-தீபிகா மீது இயக்குனர் தாக்கு

|

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
ஷாருக்கான் படத்தில் நடிக்கவிருப்பதாக வதந்தி பரப்புவதாக அசின், தீபிகா, கரீனா மீது இயக்குனர் தாக்கி உள்ளார். பாலிவுட் இயக்குனர்களில் கோபப்பட்டு பேசாத இயக்குனர் என்று பெயர் வாங்கியவர் இயக்குனர் ரோஹித் ஷெட்டி. இப்போது அவர் 3 முன்னணி நடிகைகளை கடுங்கோபத்துடன் தாக்கி பேசியது பலருக்கு ஆச்சர்யத்தை அளித்திருக்கிறது. அடுத்து ஷாருக்கான் நடிக்கும் 'சென்னை எக்ஸ்பிரஸ்' என்ற புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிப்பதுபோல் கரீனாகபூர், அசின், தீபிகா படுகோன் ஆகிய 3 நடிகைகள் பில்டப் செய்து வருகின்றனர். இது மும்பை பத்திரிகைகளில் பரபரப்பான செய்தியாக வெளியாகிறது. இதைபார்த்து கோபம் அடைந்த ரோஹித் கூறியதாவது:

அடிக்கடி எனது பேட்டிகளில் கரீனா எனக்கு பிடித்தமான நடிகை என்று கூறி இருக்கிறேன். அவரை புதிய படத்தில் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தாலும் இதுவரை அவரை நான் அணுகி அதுபற்றி பேசவில்லை. அதற்குள் இப்படத்தில் நடிக்கிறேன் என்றும், நடிக்கவில்லை என்றும் அவர் அவ்வப்போது கருத்து தெரிவிக்கிறார். 5 மாதத்துக்கு முன்பு அவரை சந்தித்தேன். சமீபத்தில் எங்கும் சந்திக்கவில்லை. ஏப்ரல் மாதம்தான் ஹீரோயினை முடிவு செய்வேன். அதேபோல் அசினிடம் இதுபற்றி கேட்கப்படுகிறது.

அவரும் அவ்வப்போது ஒரு கருத்து தெரிவிக்கிறார். தற்போது 'போல் பச்சான்' பட ஷூட்டிங்கில இருக்கிறேன். இது முடிந்தபிறகுதான் அடுத்த பட வேலை தொடங்குவேன். யாரோ ஒருவர் போன் செய்து தீபிகாதான் சென்னை எக்ஸ்பிரஸில் நடிக்கிறாரேமே என்கிறார். இதுபோன்ற சர்க்கஸ் வித்தைகளை நிறுத்திக்கொள்ளுங்கள். அழகான, திறமையான பிரபல நடிகை ஒருவரைத்தான் இப்படத்துக்கு தேர்வு செயதேன். ஆனால் இதுவரை அவர் எந்த நடிகை என்பதை முடிவு செய்யவில்லை. இவ்வாறு ரோஹித் கூறினார்.



 

Post a Comment