பழம்பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா, மூட்டு வலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சைப் பிரிவில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். பிறகு டீலக்ஸ் வார்டுக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்றார். உடல்நிலை தேறிய அவர், நேற்று மதியம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பிறகு தி.நகரிலுள்ள வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். மனோரமாவை அவரது மகன் பூபதி உடனிருந்து கவனித்துக் கொள்கிறார்.
Post a Comment