திருமண செலவுக்காக மண்டபத்தை விற்றேனா?

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தான் கட்டிய கல்யாண மண்டத்தை, தனது திருமண செலவுக்காக சினேகா விற்றதாக கூறப்படுகிறது. இது பற்றி அவர் பதிலளித்துள்ளார். நடிகை சினேகா, பிரசன்னா காதல் திருமணம் வரும் மே 11ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. அற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. இதற்கிடையில் திருமண செலவுக்காக பண்ருட்டியில் தான் கட்டிய கல்யாண மண்டபத்தை சினேகா விற்றுவிட்டதாக கோலிவுட்டில் தகவல் பரவியது. இது குறித்து சினேகா கூறியதாவது: எனக்கு சொந்தமான சொத்தை ஒரு நல்ல காரியத்துக்காக விற்றிருக்கிறேன். இதைபெரிய விஷயமாக ஏன் பேசிக் கொண்டி ருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெரும் முதலீட்டில் கட்டப்பட்ட அந்த சொத்தை வெறும் திருமண செலவுக்காக விற்றேன் என்று கூறுவது சரியல்ல. கடவுள் எனக்கு அதிகமாகவே கொடுத்திருக்கிறார். எனது முதலீடுகள் அப்படியே இருக்கிறது. திருமண செலவுக்காக மண்டபத்தை விற்றால் அது எனக்கு வருத்தத்தைதான் தந்திருக்கும்.

என் குடும்பத்தில் எனது கல்யாணம்தான் கடைசி திருமணம். எனவே இந்த திருமணத்தை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. திருமணத்தையொட்டி நடக்கவுள்ள விசேஷங்களில் கட்டுவதற்காக பலவிதமான உடைகள் வித்தியாசமான டிசைன்களில் தயாரிக்க ஆர்டர் கொடுத்திருக்கிறேன். எனது திருமண நாளுக்காக நிறைய எதிர்பார்ப்புகளுடன் ஆவலாக காத்திருக்கிறேன். இவ்வாறு சினேகா கூறினார். திருமணத்தையொட்டி புதிய படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார் சினேகா. இதற்கிடையில் குமாரவேலன் இயக்கும் ஹரிதாஸ் என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அதில் மட்டும் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு சென்னையிலேயே நடக்கிறது.


 

Post a Comment