கேன்ஸ் பட விழாவுக்குப் போன நேரத்தில் ஹாலிவுட் நடிகர் அன்டோனியோ பன்டரஸுடன், இணைந்து மல்லிகா ஷெராவத் ஆடிய காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவியான நடிகை மெலனி கிரிபித் தற்போது அன்டோனியோவை விட்டுப் பிரிந்து விட்டாராம்.
2 மாதங்களுக்கு முன்பு கேன்ஸ் பட விழா நடந்தது. அதில் இந்திய நடிகையான மல்லிகா ஷெராவத்தும் கலந்து கொண்டார். கலக்கலான கவர்ச்சி டிரஸ்ஸில் வந்த அவரைப் பார்த்து அன்டோனியோவுக்கு ஒரு மாதிரியாகி விட்டது. இதையடுத்து அவரை நெருங்கிய அன்டோனியோ, மல்லிகாவின் இடுப்பைப் பிடித்து இழுத்து ஆடத் தொடங்கினார். மல்லிகாவும், அன்டோனியோ இழுத்த இழுப்புக்கு மறுப்பு தெரிவிக்கால் மூவ்மென்ட்ஸ் கொடுத்தார். இதை சுற்றிவளைத்து வீடியோ, ஸ்டில் கேமராக்களில் படம் பிடித்து விட்டனர் பத்திரிக்கையாளர்கள்.
அத்தோடு நிற்காமல் மல்லிகாவை கூட்டிக் கொண்டு காபி கிளப், டான்ஸ் கிளப் என பெரிய ரவுண்டும் அடித்தார் அன்டோனியோ. இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்தனர். ஒன்றாக தங்கியதாகவும் கூறப்பட்டது.
இப்போது இந்தப் படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. இதைப் பார்த்து கடுப்பாகி விட்டாராம் மெலனி. மேலும் மல்லிகாவுடன் ஒட்டி உரசி தனது கணவர் பழகியதையும் கேள்விப்பட்டு தற்போது தனது கணவர் தனக்குப் போட்ட கல்யாண மோதிரத்தை கழற்றி அவரிடமே கொடுத்து விட்டுப் போய் விட்டாராம் மெலனி.
இந்தப் பஞ்சாயத்து குறித்து மல்லிகா கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் அவரது நண்பரான இவான் பிட்டன் என்பவர் கூறுகையில், மல்லிகா மீது தப்பில்லை. அவர் பாட்டுக்குத்தான் நின்றிருந்தார். அன்டோனியோதான் பின்னாலிருந்து மல்லிகாவைப் பிடித்து ஆடினார். மல்லிகாவின் கவர்ச்சிகரமான உடம்பு அவரை ஈர்த்து விட்டது என்றார்.
மல்லிகாவைப் பார்த்தால் பாம்புக்கே வியர்க்கும், அன்டோனியோ எம்மாத்திரம்...
Post a Comment