அப்பா கமல் தன்னை தீவிர நாத்திகவாதி என்று கூறிக் கொள்வதோடு, மேடைகளில் அதுகுறித்த வெளிப்படையான பிரச்சாரங்களும் செய்து வருகிறார். ஆனால் அவரது மகள் ஸ்ருதியோ கமலுக்கு நேரெதிர்.
சமீபத்தில் கூட திருப்பதி, காளஹஸ்தி, திருவனந்தபுரம், குருவாயூர் என பிரபல கோயில்களுக்கெல்லாம் ஒரு விசிட் அடித்து சாமி கும்பிட்டு வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "ஆமாம் நான் தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டவர்தான்.
வீட்டில் பூஜை ரூம் இல்லை. அப்பாவும் சாமி கும்பிட சொல்லித் தரலை. ஆனா, கடவுள் இருக்காருனு நான் முழுசா நம்புறேன். திருப்பதி, திருவனந்தபுரம் கோயில்களுக்கு மட்டும் இல்லை... இன்னும் நிறையக் கோயில்களுக்குச் சத்தம் இல்லாமல் போயிட்டுதான் இருக்கேன். அது கடவுளுக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப்.
இந்த சாமி மட்டும்தான் பிடிக்கும்னு கிடையாது. எப்பப்ப எந்த சாமி பிடிக்குதோ, அப்பப்ப அவங்களைக் கும்பிட்டுக்குவேன். அப்பா இதைப் பத்தி எதுவும் கேட்டது இல்லை. நானும் சொன்னது இல்லை!'' என்றார்.
ஸ்ருதிஹாஸன் தனது ஒவ்வொரு படம் தொடங்கும்போதும், முடிந்த போதும் தவறாமல் கோயிலில் அர்ச்சனை செய்துவிடுவாராம். சமீபத்தில் அவர் நடித்த கப்பர் சிங் வெற்றிக்கு இப்படி செய்தவர், அடுத்து பிரபு தேவா படத்தில் ஒப்பந்தமானதும் இன்னும் தீவிர நம்பிக்கையுடன் போகத் தொடங்கியுள்ளாராம்.
யாருக்கும் தொந்தரவில்லாத நம்பிக்கை... இருந்துவிட்டுப் போகட்டுமே என்று கமல் அனுமதித்திருப்பாரோ!
+ comments + 1 comments
ethana pera un appa paduthiruparu eppa aanubakikatum
Post a Comment