சென்னை: விஸ்வரூபம் படம் டி.டி.ஹெச்சில் வெளியாகி சரித்திரம் படைக்க இருக்கிற நிலையில் "விஸ்வரூபம் பார்ட் -2 " எடுக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் டி 20 நிகழ்ச்சியில் கமல்ஹாசனும் விஸ்வரூபம் நாயகி பூஜாகுமாரும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
விஸ்வரூபம் படம் பற்றிய பேச்சின் போது பூஜாகுமார், மேலோட்டமாக விஸ்வரூபம் பார்ட் 2 பற்றி சொல்ல, கமல்ஹாசனே மைக் வாங்கி நானே தனியாக ஒரு பிரஸ் மீட் வைத்து சொல்லலாம் என நினைத்தேன்.. இப்போது விஜய் டிவி மூலமாகவே சொல்லி விடுகிறேன்..விஸ்வரூபம் பார்ட்-2 எடுக்கப் போகிறேன். அதில் ரொமான்ஸ் நிறையவே இருக்கும் என்றார். அப்போது தொகுப்பாளினி, அது எப்ப வரும் என்று கேட்டதற்கு, முதலில் பார்ட்-1ஐ வரவிடுங்க என்று கூறி சிரித்தார் கமல்ஹாசன்.
Post a Comment