திருமணத்துக்குத் தயாராகிறேன். குடும்பம் குழந்தைகள் என வாழ் ஆசையாக உள்ளது, என்கிறார் சித்தார்த்.
ஆனால் மணமகள் சமந்தாவா என்ற கேள்விக்கு மட்டும், அது என் தனிப்பட்ட விஷயம் என்று கூறியுள்ளார்.
பாய்ஸில் அறிமுகமான சித்தார்த், ஒரு எம்பிஏ பட்டதாரி. ஷங்கரிடம் பணியாற்றியவர். தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார்.
ஏற்கெனவே திருமணமாகி, மனைவியைப் பிரிந்தவர் சித்தார்த்.
இவருடன் பல நடிகைகள் இணைத்துப்பேசப்பட்டனர். குறிப்பாக ஸ்ருதி ஹாஸனும் இவரும் திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்வதாகக் கூறப்பட்டது.
இப்போது சமந்தாவுடன் இணைத்து பேசப்பட்டு வருகிறார். சமீபத்தில் இருவரும் குடும்பத்தினருடன் காளஹஸ்தி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். ஜோடியாக அமர்ந்து ராகு, கேது பரிகார பூஜையும் செய்தார்கள். அப்போதுதான் இவர்கள் காதல் விஷயம் அம்பலமானது.
இருவரும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். இதுகுறித்து சித்தார்த் கூறுகையில், "நான் திருமணத்துக்கு தயாராகிறேன். குழந்தை குடும்பம் என்று இருக்க ஆசை வந்துள்ளது. விரைவில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நிறைய பெண்களுடன் என்னை இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. அவற்றை பொருட்படுத்தவில்லை. என் சொந்த வாழ்க்கையில் தலையிடும் உரிமை பத்திரிகைகளுக்கும் இல்லை... ரசிகருக்கும் இல்லை," என்றார்.
Post a Comment