சென்னை: இயக்குனரும், நடிகருமான ராஜகுமாரன் பொது இடங்களில் தனது மனைவி தேவயாணியை மேடம், அம்மா என்று அழைக்கிறாராம்.
நடிகை தேவயாணி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து 2001ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற 2 மகள்கள் உள்ளனர். தேவயாணி தொலைக்காட்சி சீரியல்களில் பிசியாக உள்ளார்.
இந்நிலையில் கணவர் ராஜகுமாரனோடு சேர்ந்து திருமதி தமிழ் படத்தில் நடித்தார். இத்தனை நாட்கள் இயக்குனராக இருந்த ராஜகுமாரன் இந்த படம் மூலம் ஹீரோவாகிவிட்டார். மேலும் தனது பெயருக்கு முன்னாள் சோலார் ஸ்டார் என்ற பட்டத்தையும் சேர்த்துக் கொண்டார்.
ராஜகுமாரன் பொது இடங்களில் தனது மனைவி தேவயாணியை அம்மா என்றும், மேடம் என்றும் அழைக்கிறாராம்.
Post a Comment