சென்னை: ஹன்சிகாவுக்கு இளம் ஹீரோக்கள் காதல் தூது அனுப்பி தொல்லை கொடுக்கிறார்களாம்.
அண்மையில் பேட்டி அளித்த ஹன்சிகா தன்னை பலர் காதலிப்பதாகவும், தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும் தெரிவித்தார். ஹன்சிகாவும் பிரபுதேவாவும் நெருக்கமானதால் நயன்தாரா பிரிந்தார் என்று கூறப்பட்டது. அதன் பிறகு ஹன்சிகாவும், சிம்புவும் காதலிப்பதாக பேச்சு அடிபட்டது. இந்த இரண்டையுமே ஹன்சிகா மறுத்தார்.
இந்நிலையில் கை நிறைய படங்களை வைத்துக் கொண்டு ஓடி, ஓடி நடிக்கும் ஹன்சிகாவுக்கு இளம் ஹீரோக்கள் சிலர் காதல் தூது விடுகிறார்களாம். ஆனால் அவற்றையெல்லாம் அம்மணி கண்டுகொள்வதே இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் அந்த இளவட்டங்கள் விடாமல் முயற்சி செய்து வருகிறார்களாம்.
அப்படி தன்னை காதலிப்பதாக துரத்துபவர்களிடம் சாரி எனக்கு உங்கள் மீது காதலும் வரவில்லை, எனக்கு காதலிக்க நேரமும் இல்லை என்று கூறி நைசாக நழுவிவிடுகிறாராம் ஹன்சிகா. தனக்கு இப்படி காதல் தூது விட்டு தொல்லை கொடுப்பவர்களின் பெயர்களை வெளியிட்டால் தன்னுடைய மார்க்கெட் அடிபடும் என்பதால் அமைதி காத்து வருகிறாராம்.
Post a Comment