சென்னை: நானும் ஸ்ரீசாந்தும் நெருக்கமாக உள்ளது போன்ற படங்கள் 7 ஆண்டுகளுக்கு முன்பு விளம்பரத்துக்காக எடுக்கப்பட்டவை.. இதை இப்போது பெரிது படுத்துவது வருத்தமாக உள்ளது என நடிகை லட்சுமி ராய் தெரிவித்துள்ளார்.
சூதாட்டப் புகாரில் சிக்கி சிறையில் உள்ள ஸ்ரீசாந்த்துடன் நெருக்கமாக இருந்த அத்தனை நடிகைகளும் சிக்கலுக்குள்ளாகி உள்ளனர்.
அத்தனை நடிகைகளும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரம் முயற்சியில் உள்ளனர் போலீசார்.
இந்த நிலையில் லட்சுமிராயும் ஸ்ரீசாந்தும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இது தனக்கு எதிரான சதி என்று வருத்தப்பட்டுள்ளார் லட்சுமி ராய்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இப்போது இன்டர்நெட்டில் வெளியாகியுள்ள படங்கள் எல்லாம் ஏழு வருடங்களுக்கு முன் ஒரு விளம்பர படத்துக்காக எடுக்கப்பட்டவை.
இதை இந்த நேரத்தில் இணைய தளங்களில் பரப்புவதும், பத்திரிகைகளில் வெளியிடுவதும் தவறானது. இந்த இக்கட்டான நேரத்தில் இப்படங்கள் வெளியாவதால் என் இமேஜ் பாதிக்கப்படும். நான் ஒரு பெண் என்பதைக் கூட கருத்தில் கொள்ளாமல் இப்படி வதந்தி பரப்புவது என் எதிர்காலத்தைப் பாதிக்கும்.
நான் ஐபிஎல் தூதுவராக இருந்ததால், தொழில் ரீதியாக அது தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்றேன். ஒரு நடிகை என்ற முறையிலேயே ஸ்ரீசாந்துடன் அந்தப் படத்தில் நடித்தேன்.
வேறு வகையில் யாருடனும் எனக்கு தனிப்பட்ட தொடர்பில்லை," என்றார்.
Post a Comment