சென்னை: சிங்கம் 2 படத்தில் சந்தானம் ஆசிரயர்களை வம்புக்கு இழுத்துள்ளார்.
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா. ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்துள்ள சிங்கம் 2 இன்று தமிழகத்தில் ரிலீஸாகியுள்ளது. நேற்றே தியேட்டர்கள் முன்பு சிங்கம் 2 போஸ்டர்கள், பிளெக்ஸ் போர்டுகள் என்று அலங்காரம் தூள் கிளப்பியுள்ளது.
படம் நேற்றே வெளிநாடுகளில் ரிலீஸாகியுள்ளது. படத்தைப் பார்த்தவர்கள் சூர்யாவின் நடிப்பை புகழ்ந்து தள்ளியுள்ளனர். அப்படி என்றால் இந்த படம் சூர்யாவின் திரையுலக வரலாற்றில் மறக்கவே முடியாத படமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இந்நிலையில் படத்தில் காமெடியில் கலக்கி இருக்கும் சந்தானம் ஒரு வசனத்தில் ஆசிரியர்களை வம்புக்கு இழுத்துள்ளார். அந்த வசனம் இது தான், "தகுதி இல்லாதவன் தமிழ் வாத்தியார், புத்தி இல்லாதவன் புவியியல் வாத்தியார், அறிவே இல்லாதவன் அறிவியல் வாத்தியார்."
Post a Comment