ஏற்கனவே ஒரு நடிகை வயதான ஹீரோக்கள் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டுள்ள நிலையில், கேரளத்தில் இருந்து வந்த அந்த சுந்தரமான யானை நடிகைக்கும் மூத்த ஹீரோக்களுடன் நடித்து ரொம்பவே போரடித்து விட்டதாம்.
அம்மணியின் அழகில் மயங்கி மேற்கொண்டு சில பெரிய மூத்த நடிகர்கள் தங்களது படத்தில் நடிக்க இந்த மிஸஸ் புலியை அணுகினார்களாம். ஆனால், அம்மணியோ ஆளை விடுங்கப்பா, நா இப்போ தான் ஸ்கூல் படிக்கிறேன். உங்க கூடலாம் நடிச்சா சீக்கிரமா என்னையும் கிழவினு வீட்டுல உட்கார வச்சுடுவாங்க நு சொல்லிட்டாராம்.
அதனால, கதையோட சேர்த்து ஹீரோவும் பிடிச்சா தான் அம்மணி நடிக்க ஒத்துக் கொள்கிறாராம்.
புத்திசாலிப் பொண்ணு, ஏற்கனவே கண்ணழகி மூத்த நடிகர்களுடன் நடித்து இள நடிகர்களுக்கு ஆன்டியான கதை இவருக்கும் தெரிந்து விட்டது போலும்...
Post a Comment