சென்னை: நடிகை மஞ்சுளாவின் உடல் சென்னை போரூரில் உள்ள மின்சார மயானத்தில் நேற்று பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.
எம்ஜிஆர், சிவாஜி, ராமாராவ், ரஜினி போன்ற ஜாம்பவான்களுடன் நடித்த மஞ்சுளா சில தினங்களுக்கு முன் கட்டிலிலிருந்து கீழே விழுந்தார்.
அடி வயிற்றில் பலத்த காயம் அடைந்த அவர் போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
மஞ்சுளாவுக்கு ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது. ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து நேற்று பிற்பகல் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்ட மஞ்சுளா உடல் போரூரில் உள்ள மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவருக்கான இறுதிச் சடங்குகளை கணவர் விஜயகுமார் செய்தார்.
Post a Comment