கொலை நோக்குப் பார்வை படத்தில் பேய் பாடல் ஒன்றைப் பாடி ரசிகர்களை பயமுறுத்தியுள்ளாராம் நடிகை ஆண்ட்ரியா.
திரு திரு துறு துறு படத்தின் இயக்குனர் நந்தினி இயக்கும் புதிய படம் கொலை நோக்கு பார்வை. இப்படத்தில் பேய் பாடல் ஒன்றை பாடியுள்ளாராம் ஆண்ட்ரியா. இப்பாடல் நன்றாக வரவேண்டும் என்பதற்காக அதிகமாகவே மெனக்கெட்டுள்ளாராம்.
ஆண்ட்ரியா பாடிய பாடல் படத்தின் சூழலுக்கு ஏற்றவாறு பாடல் அமைந்துள்ளது, நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் படத்தின் இயக்குனர் நந்தினி. அஸ்வத்தின் பின்னணி இசை அபாரமாக வந்துள்ளது என்றார் நந்தினி.
கொலை நோக்குப் பார்வை படத்தில் பின்னணிப் பாடகி சுசியின் கணவர் கார்த்திக் குமார், கன்னட பட நாயகி ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ளார். இசையமைப்பாளர் அஸ்வத்தின் இசையில், மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment