ரிஸ்க் எடுக்கத் தயங்காதவர் அஜீத்: சூர்யா

|

சென்னை: அஜீத் குமார் படங்களில் ரிஸ்க் எடுக்க ஒருபோதும் தயங்காதவர் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் 2 படத்தின் விமர்சனம் எப்படி இருந்தாலும் படம் கல்லா கட்டுகிறது. படத்தை சூர்யா தன் தோளில் தாங்குகிறார் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரிஸ்க் எடுக்கத் தயங்காதவர் அஜீத்: சூர்யா

சூர்யாவுக்கும், அஜீத்துக்கும் இடையே எப்பொழுதும் நல்ல உறவு உண்டு. ஒருவரையொருவர் பாராட்ட தயங்கியதே இல்லை.

இந்நிலையில் மங்காத்தாவில் அஜீத் ரிஸ்க் எடுத்தது பற்றி சூர்யாவிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில்,

அஜீத் ரிஸ்க் எடுக்கத் தயங்காத ஒரு நடிகர். மங்காத்தா அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. அந்த படத்தில் நரை முடியுடன் அஜீத் வந்தது அழகாக இருந்தது. மங்காத்தா ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததில் மகிழ்ச்சி. எனக்கு பிடித்த படங்களின் பட்டியலில் மங்காத்தாவுக்கு இடம் உண்டு என்றார்.

 

Post a Comment