வேண்டாம் அருள்நிதி - தன்ஷிகா

|

அருள்நிதி ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று கறாராகக் கூறி கடுப்பேற்றியுள்ளார் நடிகை தன்ஷிகா.

பேராண்மையில் அறிமுகமாகி, வசந்த பாலனின் அரவான் படத்தில் நடித்து பிரபலமானவர் தன்ஷிகா.

பாலா இயக்கத்தில் பரதேசி படத்திலும் இரு நாயகிகளில் ஒருவராக நடித்தார்.

இப்போது யா யா படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

வேண்டாம் அருள்நிதி - தன்ஷிகா

இந்த நிலையில் சிம்புதேவன் இயக்கும் ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் படத்தில் நடிக்க தன்ஷிகாவைக் கேட்டுள்ளனர்.

ஆனால் தன்ஷிகாவோ, அட்வான்ஸுடன் வந்தவர்களை அற்பமாகப் பார்த்ததோடு, "ஜனநாதன், வசந்த பாலன், பாலா போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ள நான், அருள்நிதி போன்ற வளரும் நடிகருடன் நடிக்க முடியாது," என்று கூறிவிட்டாராம்.

தன்ஷிகா நடிக்க மறுத்த வேடத்தில்தான் இப்போது பிந்து மாதவி நடிக்கிறாராம்.

 

Post a Comment