வாலிபக் கவிஞர் என்றும் காவியக் கவிஞர் என்றும் திரையுலகில் போற்றப்படும் கவிஞர் வாலியைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர். அவர் நலமடைந்து வந்து மீண்டும் பாடல்களை புனைய வேண்டும் என தமிழ் திரையுலகமே பிரார்த்திக்க ஆரம்பித்துள்ளது.
82 வயது வாலி, கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இப்போது அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கவிஞர் வாலியின் உடல்நிலை மோசம் அடைந்ததையடுத்து, அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடிகர் கமல், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் உள்ளிட்டோர் நேரில் போய் வாலியைப் பார்த்துவிட்டு வந்தனர். ஆனால் அவரால் வந்திருந்தவர்களை அடையாளம் காண முடியாத நிலை.
இப்போது வாலியின் உடல் நலமடைய வேண்டி தமிழ் திரையுலகமே பிரார்த்தனை செய்து வருகிறது.
நூற்றாண்டைக் கொண்டாடும் இந்திய சினிமாவில் நூறாண்டு வாழ்ந்து கலைச் சே்வை செய்ய எழுந்து வாருங்கள் கவிஞரே!
Post a Comment