தன் தம்பி சத்யாவையும் ஒரு ஹீரோவாக நிலைக்க வைக்க படாத பாடு படுகிறார் ஆர்யா. இப்போது தம்பியை ஹீரோவாக வைத்து புதிய படம் எடுக்கவும் முடிவு செய்துள்ளார்.
‘தி ஷோ பீப்பிள்' என்ற பேனரில் ஏற்கெனவே ‘படித்துறை' என்ற படத்தை தயாரித்து வருகிறார் ஆர்யா. இளையராஜா இசையமைக்கும் படம் இது. இரு ஆண்டுகளாக தயாரிப்பில் உள்ள படம் இது.
இந்நிலையில், தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் ‘அமர காவியம்' என்ற புதிய படத்தை தயாரிக்கிறார் ஆர்யா. இப்படத்தில் அவருடைய தம்பி சத்யா ஹீரோவாக நடிக்கிறார்.
ஏற்கெனவே ‘புத்தகம்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானாவர் சத்யா. தற்போது ‘காதல் டு கல்யாணம்', எட்டுத் திக்கும் மதயானை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ‘அமர காவியம்' படத்தை ‘நான்' படத்தை இயக்கிய ஜீவா ஷங்கர் இயக்குகிறார்.
விரைவில் படம் குறித்து அறிவிக்கப் போகிறார் ஆர்யா.
Post a Comment