சென்னை: சர்ச்சைக்குரிய மெட்ராஸ் கபே படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு தணிக்கை வாரியம், யுஏ சான்று அளித்துள்ளது. ஆனால் இந்தப் படத்தைப் போய் யார் திரையிடுவார்கள் என்று அத்தனை தியேட்டர் உரிமையாளர்களும் ஒதுங்கி விட்டதால் படத்தை திரையிட ஆளே இல்லை.
இதனால் படத் தயாரிப்பாளர்கள், குறிப்பாக இப்படத்தில் ரா அதிகாரியாக நடித்துள்ள ஜான் ஆப்ரகாம் குழம்பிப் போயுள்ளனராம்.
வெள்ளிக்கிழமை படம் தமிழகத்தில் ரிலீஸாகும் என்று படத் தயாரிப்புக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டாலும் கூட ஒரு தியேட்டர் கூட கிடைக்காததால், இப்படத்தை திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Post a Comment