நடிகை கனகா மீது போலீஸ் நடவடிக்கை கோரி தந்தை புகார்!

|

சென்னை: சமூகத்தில் தன்னை தவறானவனாகச் சித்தரித்து வரும் தன் மகள் கனகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை கனகாவின் தந்தை தேவதாஸ் போலீசில் புகார் கூறியுள்ளார்.

நடிகை கனகாவின் தந்தை தேவதாஸ் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அம்மனுவில், "என் மனைவியும் நடிகையுமான தேவிகா, மகள் கனகா பிறந்ததும் என்னிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டாள். அதன்பிறகு கனகாவை கண்ணும்கருத்துமாக நான்தான் வளர்த்து வந்தேன். இடையில் என்னென்னவோ ஆகிவிட்டது. இந்நிலையில் என் மகள் என்னை சமூகத்தில் ஒரு தவறான மனிதனைப்போல சித்தரிக்கிறாள்.

நடிகை கனகா மீது போலீஸ் நடவடிக்கை கோரி தந்தை புகார்!

நான் அவளை பைத்தியக்காரி என்று சொல்லிவருவதாகவும், அவளது சொத்துக்களை அபகரிக்க முயலுவ தாகவும் அவதூறு பரப்பி வருகிறாள். இதனால் அவள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு குறித்து போலீசார் விசாரணை செய்வதாக தேவதாஸிடம் கூறி அனுப்பி வைத்தனர்.

 

Post a Comment