நீதிக்கு தண்டனை படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் நுழைந்தவர் சரண்ராஜ். தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,இந்தி, ஒரியா,பெங்காலி உட்பட அனைத்து மொழிகளிலும் சேர்த்து நானூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார் சரண்ராஜ்.
தமிழில் ரஜினியுடன் பணக்காரன், தர்மதுரை, பாட்ஷா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இப்போது அடுத்து தனது மகன் தேஜ்ராஜை ஹீரோவாக களம் இறக்குகிறார் .
அது பற்றி நடிகர் சரண்ராஜ் கூறுகையில், "என்னை எல்லா மொழிகளிலும் நடிகனாக ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு ரசிகனுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
இப்போது எனது மகன் தேஜ்ராஜ் நடிக்கணும்னு ஆசைப்பட்டான். உடனே ஏத்துக்கொண்ட நான் அவனை வாழ்த்தினேன்.
பல இயக்குனர்கள் என் மகன் தேஜ்ராஜை வாழ்த்தினார்கள். நிறைய இயக்குனர்கள் அறிமுகப்படுத்த ஓகே சொல்லி இருக்கிறார்கள். அதுபற்றி அறிவிப்பு விரைவில் வரும்," என்றார் சரண்ராஜ்.
சினிமாவிற்கான அத்தனை பயிற்சிகளையும் பெற்றுத்தான் அறிமுகம் ஆகிறார் தேஜ்ராஜ்.
பாண்டியன் மாஸ்டரிடம் ஸ்டன்ட்டும், ரகுராம் மாஸ்டரிடம் நடனமும், பாலு மகேந்திராவின் பயிற்சி பட்டறையில் நடிப்பும் பயின்றுள்ளார் தேஜ்ராஜ்.
"உங்கள் ஆதரவும்,அன்பும்,இருந்தால் நிச்சயம் நான் கலையுலகில் வலம் வருவேன்", என்கிறார் அறிமுகநாயகன் தேஜ்ராஜ்.
Post a Comment