வேண்டாம் இந்தி வாய்ப்பு - நஸ்ரியா நஸீம்

|

வேண்டாம் இந்தி வாய்ப்பு - நஸ்ரியா நஸீம்

சென்னை: தன்னைத் தேடி வந்த இந்திப் பட வாய்ப்பை வேண்டாம் என மறுத்து சக நடிகைகளை ஆச்சர்யப்படுத்தியுள்ளார் நஸ்ரியா நஸீம்.

நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நஸ்ரியா.

முதல் படத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்றதால் இவரைத் தேடி நிறைய வாய்ப்புகள்.

தமிழில் தனுஷுடன் 'நய்யாண்டி', ஆர்யாவுடன் 'ராஜா ராணி', ஜெய்யுடன் 'திருமணம் எனும் நிக்காஹ்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதோடு ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார்.

இதனிடையே நஸ்ரியாவுக்கு இந்தி படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. நல்ல சம்பளம் பேசியிருக்கிறார்கள். தமிழில் அவர் இப்போது வாங்குவதைவிட கிட்டத்தட்ட இருமடங்கு தர முன்வந்துள்ளனர்.

இருந்தும் அந்த வாய்ப்பை உதறியிருக்கிறார் நஸ்ரியா.

காரணம்?

நல்ல முகவெட்டும், அழகான உடல்கட்டும் உள்ள நஸ்ரியாவை கிட்டத்தட்ட டூ பீஸில் தோன்ற வேண்டும் என்பதை பிரதான நிபந்தனையாக வைத்தார்களாம் இந்திக்காரர்கள்.

கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த டீலுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்று கூறி மறுத்துவிட்டாராம் நஸ்ரியா.

 

Post a Comment