சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் கை ஒடிந்துவிட்டது. இதனால் அவர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜெயம் ரவி பூலோகம் மற்றும் நிமிர்ந்து நில் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருக்கும்போது அவரது கை எலும்பு முறிந்துவிட்டது. இதனால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுவிட்டதே என்று அவர் வருத்தத்தில் உள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறுகையில்,
கையை ஒடித்துக் கொண்டேன். படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. கவலையில் உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
அவரின் ட்வீட்டைப் பார்த்து தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளனர். தான் குணமடைய வாழ்த்தியவர்களுக்கு ரவி நன்றி தெரிவித்துள்ளார்.
Post a Comment