விமல் - சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் நீயெல்லாம் நல்லா வருவடா படத்தின் ஷூட்டிங் நேற்று பிள்ளையார் சதுர்த்தியன்று தொடங்கியது.
இயக்குநர் சீமானின் தம்பி, வாழ்த்துகள், சுசி கணேசன் இயக்கிய திருட்டுப் பயலே, கந்தசாமி மற்றும் ஷார்ட்கட் ரோமியோ (இந்தி) படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஆர் நாகேந்திரன் இயக்கும் முதல் படம் இது. வெளிநாட்டுத் தமிழ்ப் பெண் கீதா நாயகியாக நடிக்கிறார்.
இவர்களுடன் சிங்கமுத்து, எம்எஸ் பாஸ்கர், இமான் அண்ணாச்சி, கும்கி அஸ்வின் உள்பட பலரும் நடிக்கின்றனர்.
என்கே ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
காமெடி ஆக்ஷன் படமாக உருவாகும் நீயெல்லாம் நல்லா வருவடா, புதுச்சேரியில் தொடங்கி, ஆஸ்திரேலியா வரை பல அழகிய லொகேஷன்களில் படமாகிறது.
இப்போதெல்லாம் காமெடியன்களின் வசனங்களே படங்களின் தலைப்புகளாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நீயெல்லாம் நல்லா வருவடா என்பது, ஓகேஓகே படத்தில் சந்தானம் உதயநிதியைப் பார்த்து சொல்லும் டயலாக் ஆகும்.
Post a Comment